மண்ணில் தவழும் என் மடி மீன் - போட்டி கவிதை

மண்ணில் தவழும் என் மடி மீன்
கண்ணில் மிளிரும் ஒர் ஆயிரம் விண்மீன்

என் முன்னே விளையாடும் பளிங்கு சிற்பமே
உன் அழகை சொல்ல வார்த்தையிங்கு சொற்பமே

போதிமர வேதம் கொண்டு தவழ்ந்திடும் முல்லை
சாதிமத பேதம் உன் அகத்தினில் இல்லை

துள்ளி வந்தாய் தந்தேன் உனக்கு தாய்பால்
அள்ளி தந்தாய் ஆனந்தம் உனது சிரிப்பால்

எழுதியவர் : சுகுமார் (1-Aug-14, 9:43 am)
பார்வை : 106

மேலே