sougoumar - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : sougoumar |
இடம் | : புதுச்சேரி |
பிறந்த தேதி | : 14-May-1968 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 64 |
புள்ளி | : 13 |
என்னில் தோன்றியதை எழுதுபவன்
சாதி
சமுதாய வியாதி
பள்ளி படிப்பில் தாக்குவதில்லை
துள்ளி விளையாடிபோதும் தொற்றுவதில்லை
பருவ வயதிலும் நெருங்குவதில்லை – பின்
உருவமின்றி உள்ளே சென்றதெப்படி
பக்குவமில்லா பழைமைவாதிகளினாலும்
பிரித்துவைக்கும் அரசியல்வாதிகளினாலும்.
அரசாங்கமே
விண்ணப்பத்தில் சாதியை வெட்டியெறி
மறக்க நினைப்பவர்களையும்
நினைக்க தூண்டுகிறது
மதம்சாதி கொண்டு.
மனங்களை பிரிப்பவர்களை
பைத்தியகாரர்களாக பட்டியலிட்டு
மனநல மையங்களுக்கு மாற்று
சாதி நாதியற்று போக
மதம் மனம் மாற
தூய காதலையும்
துவசம் செய்யும் சாதியை ஒழிக்க
மனித நேயத்தையும்
மறக்க செய்யும் மதத்தை அழிக்க
என்னால் முடியும் என்போர் எல்லாம்
தன்னால்
சிகப்பு சூரியனை
சிறை பிடித்திருந்தது மேகம்.
மனங்குளிரும்
மழைக்காலம் அது.
வாசல் தெளிப்பதுபோல்
வானம் தெளித்தது.
மெல்லிய காற்று
சொல்லியது வெளியே வாஎன்று.
வெளிர் வெளிச்சத்தில்
குளிர் காற்றோடுகலக்க
வெளியே வந்தேன்.
தெருவெல்லாம்
தீபாவளி கடைகள்.
வண்ணவிளக்குகளின் வேடிக்கையும்
விலைகுறைப்பு வாடிக்கையும்
களைகட்டவைத்தது விற்பனையை.
இரவு பணிக்கு அன்று
இருட்டு முன்பே வந்தது.
முட்டும் மேகங்கள்
கொட்டுமோ என
எண்ணியது போலவே
மின்னியது மின்னல்.
வீட்டை நோக்கி
விரைவாக நடந்தேன்.
அடைமழை
கடை விரித்து – என்
நடைக்கு
தடை போட்டது.
ஒர் மரத்தின்
ஒரம் ஒதுங்கி நின்றேன்.
சிகப்பு சூரியனை
சிறை பிடித்திருந்தது மேகம்.
மனங்குளிரும்
மழைக்காலம் அது.
வாசல் தெளிப்பதுபோல்
வானம் தெளித்தது.
மெல்லிய காற்று
சொல்லியது வெளியே வாஎன்று.
வெளிர் வெளிச்சத்தில்
குளிர் காற்றோடுகலக்க
வெளியே வந்தேன்.
தெருவெல்லாம்
தீபாவளி கடைகள்.
வண்ணவிளக்குகளின் வேடிக்கையும்
விலைகுறைப்பு வாடிக்கையும்
களைகட்டவைத்தது விற்பனையை.
இரவு பணிக்கு அன்று
இருட்டு முன்பே வந்தது.
முட்டும் மேகங்கள்
கொட்டுமோ என
எண்ணியது போலவே
மின்னியது மின்னல்.
வீட்டை நோக்கி
விரைவாக நடந்தேன்.
அடைமழை
கடை விரித்து – என்
நடைக்கு
தடை போட்டது.
ஒர் மரத்தின்
ஒரம் ஒதுங்கி நின்றேன்.
மனதிற்குள் புது மழை
சிகப்பு சூரியனை
சிறை பிடித்திருந்தது மேகம்.
மனங்குளிரும்
மழைக்காலம் அது.
வாசல் தெளிப்பதுபோல்
வானம் தெளித்தது.
மெல்லிய காற்று
சொல்லியது வெளியே வாஎன்று.
வெளிர் வெளிச்சத்தில்
குளிர் காற்றோடுகலக்க
வெளியே வந்தேன்.
தெருவெல்லாம்
தீபாவளி கடைகள்.
வண்ணவிளக்குகளின் வேடிக்கையும்
விலைகுறைப்பு வாடிக்கையும்
களைகட்டவைத்தது விற்பனையை.
இரவு பணிக்கு அன்று
இருட்டு முன்பே வந்தது.
முட்டும் மேகங்கள்
கொட்டுமோ என
எண்ணியது போலவே
மின்னியது மின்னல்.
வீட்டை (...)
1. மண்ணில் தவழும் என் மடி மீன் -எனும் வரிகளில் தொடங்கி வரி ஒன்றுக்கு 5 சொற்கள் வீதம் 8 வரிகளில் ஒரு கவிதையும் அதற்கு தக்க படமும் பதிவு செய்யவும்..படம் 75% மதிப்பெண் 25%கவிதைக்கு மதிப்பெண் என அறிக
2. எதுகை மோனை முக்கியம் .அநாகரீகமான படம் தவிர்க்கவும்
3.தாய்ப்பால் நாள் 1.8.14 அன்றுதான் படைப்புகள் தளத்தில் பதிய வேண்டும்.முன்னரோ பின்னரோ பதிபவை நிராகரிக்கப்படும்..
இரவும் பகலும்
வெளிச்சத்தின் வேறுபாடு
வறட்சியும் செழுமையும்
இயற்கையின் ஏற்பாடு
உறவும் பகையும்
உணர்ச்சியின் வெளிபாடு
இன்பமும் துன்பமும்
இதயத்தின் நிலைபாடு
இளமையும் முதுமையும்
காலத்தின் கோட்பாடு
வேறுபாடுகளை உணர்ந்து
மாறுபாடுகளை மறந்து
இடர்பாடுகளை கடந்து
முரண்பாடுகளை களைந்து
உடன்பாடுகளோடு கலந்து
உறவாடினால் -
அழகான வாழ்க்கை ஆனந்தமாய்.
உன் விரலுக்குள் என் வாழ்வு.......
எனது நடை வண்டி நீ.....
கரிசன களிம்புக்காரன்..நீ .
தண்டித்ததும் கண்டித்ததும் எனக்காக
உன் கைபிடித்து நடந்தபோது
கால்கள் வலிக்கவில்லை
நீ
கால்வலிக்க நடந்தபோது - உன்
கைபிடிக்க நானில்லை – மனம்
வலிக்கிறது
உன் உயரம்
என் துயரத்தை துரத்தியது
உன் உருவம்
துயரத்தில் இருந்தபோது – விதி
என்னை வெளியே இருத்தியது
வேதனை வேர்விட்டபோது
வேடிக்கையாய் வென்றாய் - நோய் உன்னை
சோதனை இட்டபோது மட்டும் - ஏன்
சொல்லாமல் சென்றாய்
எனக்காக நீ சுமந்த பாரம்
எனக்காக நீ கசிந்த ஈரம்
எல்லாம் திரும்புகிற நேரம் –
ஏன் சென்றாய் எட்டாத தூரம்
சோகம் வந்தபோது
சொர்க்கமாய்
மண்ணில் தவழும் என் மடி மீன்
கண்ணில் மிளிரும் ஒர் ஆயிரம் விண்மீன்
என் முன்னே விளையாடும் பளிங்கு சிற்பமே
உன் அழகை சொல்ல வார்த்தையிங்கு சொற்பமே
போதிமர வேதம் கொண்டு தவழ்ந்திடும் முல்லை
சாதிமத பேதம் உன் அகத்தினில் இல்லை
துள்ளி வந்தாய் தந்தேன் உனக்கு தாய்பால்
அள்ளி தந்தாய் ஆனந்தம் உனது சிரிப்பால்