மண்ணில் தவழும் என் மடி மீன் – கே-எஸ்-கலை தாய்ப்பால்தின போட்டிக்கு

மண்ணில் தவழும் என் மடி மீன்
பெண்ணில் பிறப்பெடுத்த ஒரு துளி வான் !

கருவில் உதித்த இந்த அரும் உறவால்
கணங்கள் செழித்துக் கொழிக்கும் தினம் அழகால் !

கொஞ்சும் மழலை உறிஞ்ச தாய் முலையை
விஞ்சும் விண்ணில் பொழியும் பெரும் மழையை !

மாரி மழையோ பாரில் பயிர் வளர்க்கும்
மாரில் சுரக்கும் தாய்ப்பால் உயிர் கொடுக்கும் !

எழுதியவர் : கே.எஸ்.கலை (1-Aug-14, 10:51 am)
பார்வை : 914

மேலே