பசிப் போராட்டம் -Mano Red

வயிறு எங்கும்
பசி வந்து வெல்ல,
மானம் இங்கு
வாய் விட்டு துள்ள,
கோபங்கள் இனி
உயிர் பறிக்குமே
அந்த உயிரும் அதற்கு
தலை சாய்க்குமே ..!!

பாவம் ஒரு பக்கம்
பழி மறுபக்கம் என
எல்லாம் போக வழியிருந்தும்
பசி போக வழியில்லை,
அழுகை குறைந்தாலும்
அமைதி இழந்தாலும்
கண்ணீரில் மட்டும்
உப்புக் குறையவில்லை..!!

முக்கால்வாசி
இதயம் துடிக்க
மூச்சு முட்ட
பசி கொள்கிறேன்,
நாவின் ருசி
மறந்து போக
கதறிக் கதறி
ஆவி துறக்கிறேன்...,!!

எலும்புகள் மெலிய
ரத்தம் சுண்ட
என்னுயிர் போனாலும்
இரக்கம் கொண்ட
இறைவன் தான் அவன்..,!!
அதிகபட்ச விதியும்
அதிகபட்ச பசியும்
சேர்த்தே படைத்துவிட்டான்...!!

பாத்திரம் அறிந்து
பிச்சையிட வேண்டாம்,
பசி அறிந்து
உணவு தந்தால் போதும்
இன்னும் உயிர்கள் இங்கே
உணவோடும்
உணர்வோடும் வாழும்...!!

எழுதியவர் : மனோ ரெட் (20-Aug-14, 10:30 am)
பார்வை : 351

சிறந்த கவிதைகள்

மேலே