நண்பா உனக்கொரு பா

நாளை விடியும் நாட்கள் துவங்கும்
காலைக் கதிர் விரியும் கவின் மலர்கள்
சோலையில் பூத்துச் சிரிக்கும்
மனம் தளர்ந்து தலை குனிந்து
தனிமையில் தோல்வியின் வருத்தத்தில்
நீ மட்டும் விரக்தியில் நடப்பதேனோ ?
வாழ்க்கை விரிந்திடும் பாலையில்லை
பாதை நெடிய பாதை
முள்ளும் முட்டுக் கட்டைகளும்
நிறைந்த பாதை !
கல்லும் களைப்படையச் செய்யும்
கடினங்களும் சவால்களும்
நிறைந்த பாதை !
நெடிய மிகக் கொடிய பாதை !
இங்கே மயில் இறகுகளோ மல்ரித்ழ்களோ
தூவியிருக்கவில்லை
உனக்காக யாரும் இங்கே
உன்னை வரவேற்க
சிவப்புக் கம்பளம் விரிக்கப்போவதில்லை
வெல்லவேண்டும் என்ற முனைப்பிருந்தால்
துணிச்சலும் துவளாத மனமும் இருந்தால்
நட நம்பிக்கையுடன் நட
இந்தப் பாதைகள் ஒரு நாள் உனக்கான
சோலையாக விரியும் !

------கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (20-Aug-14, 9:30 am)
Tanglish : nanbaa unakkoru baa
பார்வை : 78

மேலே