மனிதன் - 8வது அதிசயம்
காதல் அது குட்டிசாத்தான்
சாகும்வரை நம்முடன்.
பாசம் அது பாழுங்கிணறு
மூழ்குவதில் நிம்மதி.
கோபம் அது கொலைகாரன்
நம்மையே கொன்றுவிடும்.
அழுகை அது அழகு
பொங்கிவரும் நீர்வீழ்ச்சி.
பயம் அது பாதுகாப்பு
காப்ற்றும் கவசம்.
சிரிப்பு அது சிறப்பு
வாடாத மலர்.
வெட்கம் அது வெற்றி
மனதை தோற்கடித்துவிடும்.