காதல் என்னை கவ்வும்

செங்கதிரிலே நீ வருவாய் என காத்து நின்றேன் !
என் குறுதியில் நீ உறைந்தாய் என தேடி கண்டேன் !
நீ கடிதம் எழுத எழுத எழுத்துக்கள் அது மின்னும் !
உன் கடிதம் படிக்க படிக்க காதல் என்னை கவ்வும் !
கடலோர மணல்திட்டு அலை அரிக்கும் தானே,
என் மனதோரம்,
உன் பெயர் மெட்டு தினம் இசைக்கும் மானே !
ஈரம் அது வெயில் பட்டு இருந்த இடம் மறையும்,
என் உதிரம் அது உன் கால் பட்டால் இடியை தூக்கி எறியும் !
ஈசனவன் பாதியிடம் சக்தியிடம் கொடுத்தான்.
இனிய மொழி பேசும் உன்னை இதயத்திடம் வைத்தேன் !
அருவி கொட்ட நீர் துளிகள் காற்றினிலே பரவும்.
அருமை மொழி நீ பேச பூவாசம் வீசும் !
கண்ணிமைக்கும் நொடி பொழுதில் நீ என்னை காண்பாய் !
கற்சிலையை செதுக்குவதாய்
என்னை செதுக்கி செல்வாய் !
ஆறோடும் கரையினிலே துணி துவைக்க வந்தாய்.
துவைக்கத்தான் வந்தாய், மனதை துவைத்தெடுத்து சென்றாய் !

எழுதியவர் : நாகராஜ் துளசிமணி (28-Aug-14, 4:59 pm)
பார்வை : 52

மேலே