கலந்ததே உன் விழிகளுடன்

பலகாலம் உன்னோடு வாழ்ந்த
ஆனந்த அனுபவம் இந்த
சில காலம் உன்னோடு
பழகிய சில நாட்கள்
இன்பத்திலும் துன்பத்திலும்
உன்னோடு சேர்ந்து வாழனும்
பிரிவென்ற துயர் நம்மிடையே
என்றும் வராமல் காக்க நம்
அன்பு தடை செய்திடட்டும்
எத்தனை காலம் வாழ்ந்தாலும்
இந்த நொடியே இறந்தாலும்
உன் நினைவுகள் என்னுடனே
உடன் வந்திடும் உருவமற்ற
காற்றுடனே கலந்து கலங்கின
கண்களை காண சக்தியற்ற
என் விழிகள் கண்ணீருடன்
கலந்ததே உன் விழிகளுடன்

எழுதியவர் : உ மா (11-Sep-14, 7:47 pm)
பார்வை : 131

மேலே