மழை

வானத்திலே திருவிழாவாம்!
மத்தாப்பாய் மழைத்துளிகளாம்!
மழைத்துளியிலே என் தோட்டத்து
செடிகள் எல்லாம் சிரிக்க
இடியும் மின்னலும்
வெடிச்சத்தமாக
இடியுடன் நாட்டியமாடிய மின்னல்
எங்கோ விழுந்துவிட
அச்செடிகளெல்லாம் வாடியதேனோ!
ஒய்யாரமாய் வளர்ந்த
என் தோட்டத்து மரத்தையும்
ஒரு சுழல்காற்றிலே
அசைத்துவிட்டதேனோ!
தெருவெல்லாம் வெள்ளமாக
திடீர் என மாறி விட்டதேனோ!
வருடாவருடம் நீ நடத்தும்
வாடிக்கையா இது!
(மீள் பதிவு)