நாடு ஓட நானும் ஓட

போறச்சே..... வாரச்சே...
ச்சே..ச்சே.. யென
சலித்துக் கொண்டே
நிகழ்ந்திருக்கிறது அன்றாட
வினைகள்....

எங்கே இருக்கிறார்
என்பதை
" ஏங்க இருக்கார் "
எனமொழிந்து
நாகரீகக் கொலை
செய்திருந்தது இசை
வழங்கும் ஊடகங்கள் ......!!

அவாள்லாம் வந்தூட்டான்னு
இவா..... ச்சே..
தப்பு... தப்பு.....இவர்......
சொல்லிச் செல்கையில்
இருட்டுக்கடை
பொட்டலத்தில்
உப்புச்சுவை உணர்த்த.....

இதுதான் நாகரிகமென
பட்டணங்கள்
உரைத்திருக்கையில்..........

ஏனுங்க... என்னங்க...
இந்தாருங்கலெ.... ஏலேய்...
விட்ருங்கப்பு.........யென
பெருங் கும்பிடுகளோடு
தப்பித்திருக்கும்
பட்டிக்காடுகள்.....!!

எழுதியவர் : நல்லை.சரவணா (18-Sep-14, 9:16 pm)
பார்வை : 132

மேலே