திறனற்றவன்

என் விரல்களுக்கு
வலிமையுண்டு
என் பேனைக்கும்
நேர்மையுண்டு - ஆனால்
எழுதுவதற்குத்தான்
துப்பில்லை.....

என் நாவிற்கு
உரிமையுண்டு
என் சொற்களுக்கும்
கோபமுண்டு - ஆனால்
சொல்வதற்குத்தான்
வார்த்தையில்லை....

என் கால்களுக்கு
சக்தியுண்டு
என் மூளைக்குள்ளும்
புத்தியுண்டு - ஆனால்
நடப்பதற்குத்தான்
உணர்வே இல்லை....

ஒன்று ஒன்றாய்
எனக்குள்
ஒரு கோடி
சிந்தனைகள் - ஆனால்
ஒன்றையேனும் உருவமாக்க
தெரியாததில்
சோம்பேறித்தனம் பல....

கடவுளைப்போல்
காக்கின்ற புத்தியுமுண்டு
கடவுளைப்போல்
அழிக்கின்ற தோரணையுமுண்டு
ஆனால்
நான் எனக்குள்ளே
முடிவு கொண்டு
அசையாத பாறையாய்
அகமிழந்து
இனியும் இப்படியே கிடப்பேன்
சரி......!
நான் என்ன செய்யணும்......?

எழுதியவர் : ம.கலையரசி (24-Sep-14, 12:26 pm)
பார்வை : 110

மேலே