ராமன்
இன்றும்
இலங்கை ராவணனுக்கு
இதுவே வேலை . . . . .
அன்று
சீதையைச்
சிறை பிடித்தான் . . . . . .
இன்று
மீனவனைச்
சிறை பிடிக்கிறான் . . . . .
மீட்டு
வந்து தருவது யார். . . . .
எமக்கு
ராமர் கோவிலும் வேண்டாம். . . .
இன்னும்
ராமர் பாலமும் வேண்டாம் . . .
அரசியல்
அவலத்தில்
அல்லல் பட்டு வெம்புகிறோம் . . . .
அதனால்
ராமனே
உன்னைத்தான் நம்புகிறோம் . . . .
மீண்டும்
வந்து விடு. . .
மீட்டு எம் கவலை போக்கி விடு. . .
மீனவன்
கண்ணீர் துடைத்து விடு . . . .
*=*=*=* *=*=*=* *=*=*=*,