அழகு + ஆபத்து = வாழ்கை

ஓடி கொண்டு இருக்கும்போது
ஒன்றும் தெரிவதில்லை

தேடி கொண்டு இருக்கும் போதும்
தீரவில்லை வாழ்கை

திரும்பி பார்க்கும்போது மட்டும்
தள்ளாடுகிறது அடுத்த அடி !


தொலைவில் நின்று வாழ்வை
ரசித்தவன் துக்கப்படுவதில்லை

தொலைந்து போன வாழ்வை
தேடியவன் சந்தோசப்படவில்லை

மனிதன் படைப்பு இறுதி
செய்யப் பட்டதுதான் –ஆனால்

உறுதி செய்யப்படாத
ஒருவித பரிணாம விபத்து .!


ஆபத்தை ரசிப்பவன்
வாழ்வை நேசிக்கிறான் !

ஆசையை ருசிப்பவன்
வழுக்கிகொண்டே போகிறான் .!


அன்பையும் ,கருணையையும்
உடலாயும் , உயிராயும் கொண்டவன்,

கடவுளின் காவலில் சாவகாசமாக
கதை படித்து கொண்டிருக்கிறான் !..

எழுதியவர் : கிருஷ்ணமூர்த்தி (24-Sep-14, 7:22 pm)
சேர்த்தது : krishnamoorthys
பார்வை : 85

மேலே