அழகு + ஆபத்து = வாழ்கை

ஓடி கொண்டு இருக்கும்போது
ஒன்றும் தெரிவதில்லை
தேடி கொண்டு இருக்கும் போதும்
தீரவில்லை வாழ்கை
திரும்பி பார்க்கும்போது மட்டும்
தள்ளாடுகிறது அடுத்த அடி !
தொலைவில் நின்று வாழ்வை
ரசித்தவன் துக்கப்படுவதில்லை
தொலைந்து போன வாழ்வை
தேடியவன் சந்தோசப்படவில்லை
மனிதன் படைப்பு இறுதி
செய்யப் பட்டதுதான் –ஆனால்
உறுதி செய்யப்படாத
ஒருவித பரிணாம விபத்து .!
ஆபத்தை ரசிப்பவன்
வாழ்வை நேசிக்கிறான் !
ஆசையை ருசிப்பவன்
வழுக்கிகொண்டே போகிறான் .!
அன்பையும் ,கருணையையும்
உடலாயும் , உயிராயும் கொண்டவன்,
கடவுளின் காவலில் சாவகாசமாக
கதை படித்து கொண்டிருக்கிறான் !..