கருத்திலே பூத்த கவி--05-08-14
206362- சியாமளாவின் கவிதையைப் படித்தபோது எழுதியது....
பசுமைபடர் பர்வதத்தில்
பாலருவி பொங்கிவிழும் ....!!
**கொசுத்துயர மில்லாமல்
குந்திவர மனந்துடிக்கும்!
அலங்கார விருட்சவளைவு
அழகாக வரவேற்கும் ....!!
**அரசியலார் தோரணங்கள்
அழிந்தனபோல் மனம்லயிக்கும்!
வெயிலுக்குத் திரைபோட்டு
வெண்மேகம் குடைவிரிக்கும் .....!!
**மயிலழகுத் தோகையைப்போல்
மலைவிரிந்து மனமிழுக்கும்!
மலையருவி விழும்சத்தம்
மதுரமாய் மனம்மயக்கும் ....!!
**கலைகளிலே சிறந்தவனாய்க்
கடவுளையே மனம்னினைக்கும்!
தடாகம் தவழும்தென்றல்
தடவமேனி சிலிர்த்துவிடும் .....!!
**கடாரம் வென்றவனின்
களிப்பெனக்குள் அலையடிக்கும்!
கரையமர்ந்து காட்சிகாண
கவிதைகள் ஊற்றெடுக்கும் ....!!!
***கவிசியாம ளா,படிக்கக்
கண்மூட மனந்துடிக்கும்!
================== ==================
206362-சியாமளாவின் கவிதையையும் சென்று படியுங்கள்....