கருத்திலே பூத்த கவி--05-08-14

206362- சியாமளாவின் கவிதையைப் படித்தபோது எழுதியது....

பசுமைபடர் பர்வதத்தில்
பாலருவி பொங்கிவிழும் ....!!
**கொசுத்துயர மில்லாமல்
குந்திவர மனந்துடிக்கும்!

அலங்கார விருட்சவளைவு
அழகாக வரவேற்கும் ....!!
**அரசியலார் தோரணங்கள்
அழிந்தனபோல் மனம்லயிக்கும்!

வெயிலுக்குத் திரைபோட்டு
வெண்மேகம் குடைவிரிக்கும் .....!!
**மயிலழகுத் தோகையைப்போல்
மலைவிரிந்து மனமிழுக்கும்!

மலையருவி விழும்சத்தம்
மதுரமாய் மனம்மயக்கும் ....!!
**கலைகளிலே சிறந்தவனாய்க்
கடவுளையே மனம்னினைக்கும்!

தடாகம் தவழும்தென்றல்
தடவமேனி சிலிர்த்துவிடும் .....!!
**கடாரம் வென்றவனின்
களிப்பெனக்குள் அலையடிக்கும்!

கரையமர்ந்து காட்சிகாண
கவிதைகள் ஊற்றெடுக்கும் ....!!!
***கவிசியாம ளா,படிக்கக்
கண்மூட மனந்துடிக்கும்!
================== ==================
206362-சியாமளாவின் கவிதையையும் சென்று படியுங்கள்....

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (24-Sep-14, 7:26 pm)
பார்வை : 56

மேலே