வற்றுவதில்லை
கடல் வற்றினாலும்
மண் வற்றுவதில்லை
உடல் வற்றினாலும்
எண்ணம் வற்றுவதில்லை
நீர் வற்றினாலும்
தாகம் வற்றுவதில்லை
ஊர் வற்றினாலும்
உலகம் வற்றுவதில்லை
நேரம் வற்றினாலும்
வேலைகள் வற்றுவதில்லை
சிற்பிகள் வற்றினாலும்
சிலைகள் வற்றுவதில்லை
படைகள் வற்றினாலும்
கொள்கை வற்றுவதில்லை
சுமைகள் வற்றினாலும்
சுவடுகள் வற்றுவதில்லை
ஆசைகள் வற்றினாலும்
அன்பு வற்றுவதில்லை
நன்மைகள் வற்றினாலும்
புண்ணியங்கள் வற்றுவதில்லை
பக்திகள் வற்றினாலும்
சக்திகள் வற்றுவதில்லை
படைகள் வற்றினாலும்
களங்கள் வற்றுவதில்லை
எழுத்துகள் வற்றினாலும்
மொழிகள் வற்றுவதில்லை
தலைவர்கள் வற்றினாலும்
தமிழ் வற்றுவதில்லை
கவிதைகள் வற்றினாலும்
கவிஞர்கள் வற்றுவதில்லை