தேசத்தைக் காத்தல் செய்

சுதந்திரம் பெற்றுத்தந்தது காந்திஜியா நேதாஜியா
நாணயத்துக்கு எது வேண்டும் பூவா தலையா
முகத்துக்கு முக்கியம் எது
வலதுகண்ணா இடதுகண்ணா
காந்திஜி வழி வீரம் கலந்த ஈரப்போர்
நேதாஜி வழி ஈரம் கலந்த வீரப்போர்

மாற்றமும் ஏற்றமும் தரும் எதிரிகளை வணங்குவோம்
எண்ணிலடங்காத் தலைவர்களை இந்தியா இழந்திருக்கும் ஆங்கிலேயர்கள் வராவிட்டால்
இந்தியா இன்னும் பாளையமாக சமஸ்தானமாக குறுநிலமாக
குறுகி குறுகிக் கிடந்திருக்கும் ஆங்கிலேயர்கள் வராவிட்டால்
பிரிந்ததையும் பிரிந்தவர்களையும் சேர்த்த அருமை ஆங்கிலேயர்களின் பெருமை

அன்று கலைகள் மலிந்த நாடு இன்று கவலைகள் மலிந்த நாடு
அதைக் களையும் வழிகளை நீ நாடு
சமயவெறி வெறும் சந்தர்ப்ப வெறி சமயநெறி பெரும் சத்திய நெறி
சமயவெறி இறக்கட்டும் சமயநெறி பிறக்கட்டும்

விவசாயம் காக்க மனிதமனங்களை இணைப்போம்
கூடவே தண்ணீர் நதிகளையும் இணைப்போம்

பஞ்சமே வந்தாலும் இலஞ்சம் வாங்காதே
பஞ்சம் வரும் போகும் இலஞ்சம் வந்தால் போகாது

மக்கள்தொகையை விட ஆபத்தானது
திவிரவாதத்தொகை
விலங்குகள் தான் காட்டில் இருக்கும்
இப்பொழுது தீவிரவாதிகளும் காட்டில்தான்
தீவிரவாதிகளே இருக்க வேண்டுமெனில் காட்டிலேயே இருங்கள்
வாழ வேண்டுமெனில் நாட்டிற்குள் வாருங்கள்

தேசம் உங்களை காத்தல் செய்ய
தேசத்தைக் காத்தல் செய்வீர் அல்லது அழித்தல் செய்யாதீர்
அழித்தல் முட்டாள்களின் முதல் தொழில்

இந்தியாவுக்கு மூன்று பக்கமும் தண்ணீர் மட்டும் சூழ்ந்திருக்கட்டும்
இந்தியாவுக்கு மூன்று பக்கமும் கண்ணீர் மட்டும் சூழாது இருக்கட்டும்

பிரிந்து பிரிந்து பல நாளைக் கொண்டாடுவோம்
ஒன்றுசேர்ந்து இரண்டு நாளைக் கொண்டாடுவோம்
சுதந்திரநாளையும் குடியரசுநாளையும்

இந்தியா உலகப் பரப்பளவில் ஏழாமிடம்
உலகப் பண்பாட்டளவில் முதலிடம்

தேகத்தைவிட தேசம் உயா்ந்தது
தேகத்துக்கு வயதானால் மதிப்புக் குறையும்
தேசத்துக்கு வயதானால் மதிப்புக் கூடும்

‘‘ வேற்றுமையில் ஒற்றுமை ”உலகநாடுகளுக்குக் கொள்கை
‘‘ வேற்றுமையில் ஒற்றுமை ”பாரதநாட்டிற்கு அன்றாட வாழ்க்கை
உங்களுக்கு உரிமைகளும் நிறையஉண்டு கடமைகளும் நிறையஉண்டு
கடமை செய்வோம் கட்டாயம் பலன் உண்டு

நல்லரசு ஆவதும் வல்லரசு ஆவதும் நிச்சயம்
அந்நாள்வரை ஒற்றுமைக் காப்பதே நம் இலட்சியம்

எழுதியவர் : damodarakannan (26-Sep-14, 11:38 am)
சேர்த்தது : damodarakannan
பார்வை : 1364

மேலே