கவலையறியா காதல் - இராஜ்குமார்

கவலையறியா காதல்
=====================
விழியின் ஒளியில்
இருள் தெரிவதில்லை
இருளின் பாதையில்
விழிகளே தெரிவதில்லை
வரியின் கற்பனையில்
உண்மை தெரிவதில்லை
உண்மை உரைப்பதில்
கற்பனையே தெரிவதில்லை
கவலையின் கண்ணீரில்
காதல் தெரிவதில்லை
காதலின் தோல்வியில்
கவலையே தெரிவதில்லை
- இராஜ்குமார்
நாள் : 10 - 10 - 2011