ஆசை.
நிலவை காட்டி
சோறு ஊட்டினாள் அன்னை...
அழுகையை நிறுத்தினால்
வானத்தில் பறக்கும்
வானூர்தியை வாங்கி தருவதாக
கூறினார் தந்தை.........
இப்படி கிட்டாத பொருளை
காட்டியே என்னை வளர்த்ததினால் தான்
என்னவோ நான்
உன் மீது ஆசை வைத்துள்ளேன் போல..........