வீரமாய் சாகலாம் வா

..."" வீரமாய் சாகலாம் வா ""...

தோல்வியை ரசித்து ரசித்து
வெற்றியை புசிக்கலாம் வா
வீழ்ந்த ஓவ்வொரு துளியும்
விதையாய் முளைக்கும் வா
விதியின் பெயரை சொல்லி
உன் வீரியம் குறைக்கலாமா
வீரத்தை சுமந்திடும் நெஞ்சம்
விழி ஈரத்தில் நனையலாமா
கோழையாய் வாழ்வதினும்
நாம் வீரமாய் சாகலாம் வா,,,

உணர்வு உறைந்த இரத்தம்
உயிரைக் குடிக்கும் நித்தம்
ஒப்பாரி ஓலத்தின் சப்த்தம்
ஒலித்திடும் எட்டுத் திக்கும்
துக்கம் நெஞ்சத்தை முட்டும்
உயிர் எமை பிரியும் மட்டும்
ஓயாதே எங்களின் யுத்தம்
இலக்கு அடைவது சித்தம்
கொடு மண்ணுக்கு முத்தம்
வெற்றி என்பதே முழக்கம்,,,

என்றும் உங்கள் அன்புடன் ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (1-Oct-14, 11:03 am)
பார்வை : 1521

மேலே