சுயநலம்

பொய்மையின் பின்னால்
பெருங்கூட்டம் கூடும்
உண்மையை உரைப்பவன்
தனித்தே நிற்பான்
உலகோரின் கண்களில்
அவன்தெரிய மாட்டான்

பேட்டைக்கு ஒருரவுடி
தலைவனாய் இருப்பான்
பேரிடி விழுந்தாலும்
தாங்கிட வருவான்.
ரவுடிக்கு ரவுடிகள்
அரவணைப்பு கொடுப்பார்

நல்லவன் பாதையில்
அடிபட்டுக் கிடந்தாலும்
வேடிக்கை பார்ப்பதற்கே
அலைமோதும் கூட்டம்
உயிர்காக்க முன்வருவோர்
ஓரிரு மனிதரே.

சுயநலம் ஒன்றையே
கசடறக் கற்றவர்க்கு
பொதுநலம் பேணிட
இருக்காது ஒருமனம்
அற்பப் பொழுதுபோக்கில்
மூழ்கிக் கிடப்பவர்க்கு
பொதுநலம் புரியாது.

எழுதியவர் : மலர் (2-Oct-14, 8:54 pm)
Tanglish : suyanalam
பார்வை : 1508

மேலே