அக்கார்டிங் டு டமில் லிட்ரேச்சர்
என் பேரு கவிஞனுங்க . ஒரு நாள்ல 24 மணிநேரம் இருக்குங்க என்பது உங்களுக்கு நான் முதலில் தரப்போகும் அறிய தகவல் . அந்த 24 மணிநேரத்துல ....நான் கவிதை எழுத வந்தா
4 மணி நேரம் யார் பெரிய கவிஞர்ன்ற பட்டி மன்றத்துல போய்டுதுங்க . அடுத்த இலக்கிய நோபல் பரிசு இங்கிருக்கும் A க்கா , B க்கா , C க்கா ன்னு Z வரை வச்சி இருக்காங்க .நானும் ஒரு கூட்டத்துல சேந்து மீதி 25 பேர திட்டி தீத்துறேன் . அப்ப நான் ஆதரிச்ச கவிஞர நான் நோபலுக்கு அனுப்பும்போது அவர் புளகாங்கிதம் அடைஞ்சு என் பேர ஆஸ்கார் க்கு அனுப்பிடறார் ........
அடுத்த 4 மணி நேரம் - இது FAKE ID வைப்பு / கண்டுபிடிப்பு . என்னைய பாராட்ட நானே ரெண்டு FAKE ID வச்சுகிறேன். அப்புறம் என் நண்பர்கள திட்டவும் இந்த FAKE ID மிகச் சிறந்த சாதனமாக இருக்கு .ராமர் கூட வாலிய மறைஞ்சு நின்னு கொல்லாம , FAKE ID வச்சு கொன்னு இருக்கலாம் .
எனக்கு என்னவோ இங்க இந்த ஆளுங்க ஜாஸ்தி ஆயிட்டதால இவங்க பிரச்சனைகளை பேச FAKEID .காம் உருவாக்கலாம்னு பரிந்துரை செய்றேன் .
அடுத்து நாலு மணி நேரம் CHAT ல , தனிவிடுகை ல போய்டுதுங்க .அட நான் கவிதைக்கான டிஸ்கஷன் பண்ண வேணாமா ? உலக பொருளாதாரம் , இந்தியாவின் எழுச்சி , மூன்றாம் நாடுகளின் அவலங்கள் , அடுத்த அறிவியல் கண்டுபிடிப்புகள் , தமிழனின் வாழ்வு ...இதை பத்தி எல்லாம் பேச வேணாமா ?
அடுத்து நாலு மணி நேரம் இப்படி எழுதறதா , அப்படி எழுதறதா , இல்ல இப்படி , அப்படி ரெண்டும் சேர்ந்து இப்படி எழுதலாமே ன்னு ஒரு விவாதம் ... நான் சொல்றதுக்கு சூப்பரா ஒரு மேட்டர் வச்சிருந்தேன் ...மேட்டர் முக்கியமா , இவங்க சொல்ற டிசைன் முக்கியமா ???
அந்த குழப்பத்துல நான் எப்படியும் எழுதாம எதயும் எழுதாம அப்படியே திரும்பி பாக்காம ஓடிட்டேன் ..
அடுத்த நாலு மணி நேரம் - யார் கவிதையும் படிக்காம அருமை , அட்டகாசம் , அமர்க்களம் . ஆசை , அசல்னு அஜித் பட டைட்டில் ஆ கவிதைங்க கீழ போடறதுக்கு சரியா போய்டுதுங்க ...
கடைசி நாலு மணி நேரம் - பஞ்சாயத்து டைம் க .அதுதாங்க எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு . அங்க என்ன மாதிரியே டைம் வேஸ்ட் பண்ண என் நண்பிகளும் , நண்பர்களும் சிக்கறாங்க பாருங்க ..
கதையின் நீதி - நேரத்தை ஒழுங்காக விரயம் செய்யுங்கள் .அது பணத்தை விட பெரியது .இல்லன்னா நீங்களும் 24 மணி நேரம் வேஸ்ட் பண்ணி பஞ்சயாத்துல நிப்பிங்க ....