அலெர்ட் அன்பழகனும் தம்பியும்

அ.அ :
என்ன தம்பி இன்னைக்கு ஆளையே காணோம்.உன் கூட்டத்தோட சேர்ந்து 'புத்துணர்ச்சி பானம்'
பருக போனீயோ?

தம்பி:
என்ன அண்ணே ! இப்படி சொல்லுறீங்க .உங்கள விட்டுட்டா போவேன்.
அ .அ :
டேய் ,உனக்கெல்லாம் இப்ப பயமே இல்லாம போச்சி .
என்ன மாதிரி, சமுதாயம் நம்மள மதிக்கணும் ன்னு நினைக்கிற யாரும் மதுவ தொட மாட்டான்.

தம்பி:
இதுல என்ன அண்ணே தப்பு இருக்கு ?

இப்ப நம்ம இளைய தளபதி விஜய் எடுத்துகோங்க ..............
'bro bro 'ன்னு சரக்கு அடிச்சிகிட்டு என்னமா பட்டு பாடுறாரு.
நம்ம அல்டிமேட் ஸ்டார் ,அவரு படம் ஓட பாதி காரணம்' அவர் குடிச்சிகிட்டே பேசுற வசனங்கள் 'தான் .

தனுஷ்,சிம்பு அவன்,இவன் ன்னு படத்துக்கு படம், சீனுக்கு சீன் ,குடிச்சி கிட்டே இருக்காங்க.

அத விடுங்க இப்ப எல்லாம் ஹீரோஇன் என்ட்ரி சீனே 'பாட்டிலோட தான்' வருது


எல்லாரும் பண்றது எப்படி அண்ணே தப்பாகும்.?

அ.அ :
டேய் ,இப்படி தான் இளைய தலைமுறை சீரழிவுக்கு மிக பெரிய ஆபத்தா இருக்கிறது ,இந்த மாதிரி கேடு
கெட்ட ,சமூக பொறுப்பற்ற திரைப்படங்கள் தான் .
எந்த ஒரு தப்பும் ,நம்ம பார்வைக்கு திரும்ப திரும்ப வரும் போது நம்ம மனசிலே ஒரு தொய்வு வந்துடும்.பயம் விட்டுடும்,தப்பு இல்லன்னு தோணும் .
இப்ப எடுக்க படுகிற திரைப்படங்கள் எல்லாம் பண்பாட்டு சிதைவுக்கான 'slow poisions ' தான் .

தம்பி;
தண்ணி அடிச்சிட்டு வெளிய போனா தான தப்பு.
வீண் சண்டைக்கு போகலாம்.
விபத்து உண்டாகலாம்
எல்லா சமூக தீங்கிற்கும் காரணமாய் அமையலாம்.

கொஞ்சம் குடிச்சிட்டு ,வீட்டுல படுத்தா என்ன தப்பு அண்ணே?.

அ.அ.:
தம்பி ,தப்பு சின்னதோ,பெரியதோ தப்பு ,தப்பு தான்
தப்ப சரியா செஞ்சாலும் தப்பு தான்.

அது,உடல் உள்ளுறுப்புகள் எல்லாத்தையும் பாழாக்கிடும்.
மூளையும் கெடுக்கும்.கல்லீரல் வேகும்.இன்னும் சொல்லிகிட்டே போகலாம்.
நீ ,அது கிட்ட போகாத.சரியா..........


தம்பி:
அண்ணே ,நீங்க சொல்லிடீங்க இல்ல .........
நான் இனி மது குடிக்கவே மாட்டேன் .


அ.அ:
தம்பி,நீ முதல்ல,சினிமாக்காரனை நம்புறதா விடு .அவனையெல்லாம் 'ரோல் மாடலா'எடுக்காத.
அவன் பொழைப்பு அது.எவனோ எழுதி கொடுத்து நடிக்க சொல்லுறத அவன் நடிக்கிறான்.

சினிமா நடிகன் ஒரு 'high tech ' கூத்தாடி .அவ்வளவு தான்.

தம்பி;
நீங்க என்ன அண்ணே இப்படி சொல்லுறீங்க.
கூத்தாடி அது,இதுன்னு .............
நம்ம சூப்பர் ஸ்டார் அரசியலுக்கு வருவாரா?மாட்டாரான்னு காரசாரமா விவாதம் ஓடிகிட்டு இருக்கு

நீங்க இப்படி சொல்லுறீங்க?

அ.அ;
தம்பி அது தமிழ்நாட்டுக்கு விரிக்கிற' பூணூல் வலை'
அதுவும் மீன்னு நினைச்சு ஒரு 'கருவாட்டுக்கு' வலை போட்டு இருக்காங்க.

பார்ப்போம்................பார்ப்போம்.............

எழுதியவர் : கௌதமி தமிழரசன் (10-Oct-14, 12:54 pm)
சேர்த்தது : gowthami
பார்வை : 1371

மேலே