போன பாசம் கிடைக்குமா
![](https://eluthu.com/images/loading.gif)
பிரிந்துபோன என் வாழ்க்கை
பிரிதென்ன பயன் ..............
நோய்நொடி பல கடந்து
நொந்து போன நானும்,
பாசம் எனும் வலையை விட்டு
பறந்து திரிகிறேன்...............
சேர்த்த செல்வம் எல்லாம்
சேர்ந்தா வரும் .........
கோடிக் கணக்கான மக்கள் உள்ளம் --அங்கு
கொடுமை நிறை வாழ்விலே ............
நான் மட்டும் தப்புவேனா ..........
எப்படி முடியும் ..........
எல்லாம் முடிந்துவிட்டது --என்று
என்னால் சொல்ல முடியுமோ.................
நான் மறைந்து போனாலும்
நாகரீகம் அங்கு வளர்ந்து கொண்டு தானே..........
குட்டிக் கரணம் போடாமல் இருக்குமோ --இங்கு
குடிகாரக் கும்பலும் .............
நான் இல்லை என்று ,,............
பாவி நானும் திரும்பி வர முடியுமா?
மண்ணுக்குள்ள போயிட்டா..........
பரிகாரம் தான் பண்ண முடியுமா?--என்
பாவத்தைச் சொல்லி .............
செய்வதை எல்லாம் செய்துவிட்டு
செய்வதறியாது திகைக்கிறேனே.........
காதல் என்னும் பாதை தேடி
கவிதையிலே உறவாடி ----
வாழ்ந்த நாட்கள் --இங்கு
வாடைக் காற்றாய்.............
என்ன என் வாழ்க்கையும் --என்று
ஏங்கி அழ --நான் என்ன
ஏழு மாத குழந்தையா?..........
போன பாசம் கிடைக்குமா?
பொங்கி வழிகிறது --என்
கண்ணில் நீர்..............