குறளும் கவிதையில் பொருளும் - இன்பத்தின் இருப்பிடம்
அழகைக் காண்பது
கண்ணுக்குச் சுகம்...
இசையை ரசிப்பது
காதுக்குச் சுகம்...
தேனைச் சுவைப்பது
நாவுக்குச் சுகம்..
பூவை நுகர்வது
நாசிக்குச் சுகம்....
மென்காற்றின் தழுவல்
மேனிக்குச் சுகம்...
மெத்தச்சரி
இத்தனை சுகமும்
மொத்தமாய் வேண்டும்.
எவ்விடம் கிடைக்கும் ?
அவ்விடம் கிடைக்கும்
அதோ
அந்தப் பெண்ணிடம் கிடைக்கும்.
(கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே யுள - 1101)