இனிப்பென்ற சொல்லுக்கு

(நும் இனிய பிறந்தநாள் இன்று :) :) )

எண்ணத்தில் இனிமை....
எழில் கொஞ்சும்
உள்ளத்தில் இனிமை....
எழில் கொஞ்சும்
உள்ளத்தி னுள்ளிருந்து
ஊற்றெடுக்குஞ்
சிரிப்பாலே உருவாகுங்
கன்னத்துவிருச்செழுமை, இனிமை....
உவகைதரும் நந்மொழியில் இனிமை.....
உதிர்க்கின்ற நற்கவிதைச்
சாற்றினிலே இனிமை...
மாற்றில்லா மனத்துக்கண் குணமணமும் இனிமை....
ஊற்றதுவாம் நெஞ்சத்து
நட்பதுவும் இனிமை...
பால்-வயது பாராமல்
பாங்குடனே பழகுமுங்கள்
பண்பதுவும் இனிமை....
உம் மலர்முகமும் இனிமை...
உள்ளிருந்து ஊற்றெடுக்கும் உணர்வலையும் இனிமை...
இனிமை,
இரண்டின்றுப் பிடித்தமாயின!
ஒன்றந்தப் பழநிமலை யருளும் பஞ்சாமிர்தம்...!
இரண்டா மினிப்பிந்தப் பழனியன்றோ?! :)


( :) ஐயா, தம்மை வாழ்த்தும் வயதிலையாதலால், தாம் நீடு வாழ வேண்டுமனத்தொடு யான்... :) )

எழுதியவர் : சுந்தரேசன் புருஷோத்தமன் (12-Oct-14, 1:40 am)
பார்வை : 13613

மேலே