என்னை தாக்கும் உன் கூர்மையான ஆயுதம் 555

அடி கள்ளி...

உன்னுடவே பிறந்த உன் மௌனம்
என்னும் குழந்தைகள்...

என்னுடன் சண்டையிட...

முகம் மறைத்து
செல்கிறது...

உன் புன்னகை...

எத்தனை அழகு உன் கோபம்
என்னும் வானவில்...

உன் முகத்தில்
ஒளிரும் போது...

என் கோபத்தினை
புறம் தள்ளி...

என்னை ஈர்க்கும்
காந்தமடி...

உன் சிறு சிறு
சிணுங்கல்கள்...

உன் புன்னகை,உன் கோபம்
உன் மௌனம்...

ஆயுதங்கள் இன்றி
என் ஆண்மையை ஆளும்...

கூர்மையான ஆயுதமடி...

உன்னுடன் பிறந்த
எல்லாவற்றையும்...

எனக்காக விட்டு
கொடுப்பாயா...

என் கண்மணியே
என் காதலியாக.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (15-Oct-14, 3:44 pm)
பார்வை : 2172

மேலே