கருவே கரு---------அஹமது அலி-----

நீர்மத்தின் சேர்மத்தில்
நிரவி........

நீள்கோள வடிவத்தில்
நீந்தி.........

கூழ்மத்தின் நிலையிலே
கூடி..........

கூறுபாட்டில் வண்ணம்
இருவேறாகி........

ஓடொன்று கூடாய்
ஒடுங்கி.......

சூடுகண்ட கதகதப்பில்
மெருகி.......

சூல் கொண்ட கருவது
உயிர்த்து.....

கூடுடைத்து ஒடுபிரித்து
குதிக்க,......

குட்டி உயிர் உலகில்
பிறக்குது......!

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (16-Oct-14, 7:30 am)
பார்வை : 159

மேலே