யாழ் தேவி
![](https://eluthu.com/images/loading.gif)
உரிஞ்சான்குண்டிச் சிறுவர்
ஓடிவந்து கையசைக்க வேகமெடுக்கும்.
இருமருங்கும் சணல்விளைந்த வயலூடு
மஞ்சள் பூவிடை மறைந்தும் எழுந்தும்
அது வரும்.
அறுவடை முடித்த வயலூடு போகும்.
வெறும் இரும்புக்கூடெனினும்
எத்தனை நாள் பார்த்தாலும் அலுக்காது.
தொட்டுப்பார்த்தால் சுகமிருக்காது
எனினும்
புகைவண்டிமீது எமக்கு பகையில்லை.
இன்றேன்
தண்டவாளங்களிருந்த தடயங்களற்று
விதவைக்கோலத்தில் புகையிரதப்பாதை?
சிலிப்பர் கட்டைக்கும்
சிக்னல்
மரத்துக்கும்
என்ன நடந்தது?
எவர் பிடுங்கிச்சென்றார்?
இரும்புப் பாதையேன்
இல்லாமற் போச்சு?
ஸ்ரேசன் கட்டிடங்கள் கூரையற்று
குட்டிச்சுவரானதேன்?
சொந்தமற்றுப்போன தேசத்துடனான
உறவைத்துண்டித்தது ஓரினம்.
இனத்தின் முகத்தைச் சிதைத்தவரின்
இரும்புப்பாதை இல்லாமற்போனது.
நூலறுந்த பட்டத்துக்கு வாலெதற்கு?
பகையற்றிருந்த வரை
ஊர்களை புகைவண்டி இணைத்தது.
உறவற்றுப் போனதும்
தொடர்பற்றுப் போனது.
…
தண்டவாளத்துக்கு என்ன தெரியும்?
அது பேசாமற்கிடந்து
துருப்பிடித்துப் போனதால்
பிடுங்கி எடுத்துக்கொண்டோம்.
…
ஒருகட்டத்தில் அழகாயிருந்தன தான் எல்லாம்.
இந்துசமுத்திர மாங்கனியை
“அந்த” அணில்கள்தான் அரித்தன.
நாங்கள் எமக்குரிய பாதியைப் பவுத்திரப்படுத்த
காம்பாய்க் கிடந்த இரும்புக்கம்பிகள் கழன்றன.
சிலிப்பர் கட்டைக்கும்
சிக்னல் மரத்துக்கும்