புதுவிதமாய் கவிதை சொல்ல

புதுவிதமாய் கவிதை சொல்ல
தொடர்ந்திடும் என் முயற்சி
வார்த்தை தேடல் கொள்ளும்
பயணம் என் தொடர்ச்சி

சில சில சாரல் கண்டு
மனதில் ஒரு கிளர்ச்சி
அழகு கவிதை என்றால்
தானாய் புத்துணர்ச்சி

ஒவ்வொரு கவிதை ஜனிக்கையிலும்
தாயின் பிரசவ உணர்வு
நல்ல படைப்பு அமைந்து போனால்
உணர்கிறேன் பெருமையோடு

எழுதியவர் : ருத்ரன் (17-Oct-14, 12:22 pm)
பார்வை : 76

மேலே