வருவாய்நீ

நீயே..எனக்கு
வலியும் தருகிறாய்..
வலி மருந்தாகவும்
ஆகிறாய்!
நீயே..குளிர்
காற்றாய் வீசுகிறாய்..
என்னுள்ளே வெப்பத்தையும்
கூட்டுகிறாய்!
நீயே..காதல்
கணை தொடுக்கிறாய்..
கோபத்தில் முகம்
சிவக்கிறாய்!
நீயே.. கனவு
தோறும் வருகிறாய்..
நேரில் கலங்கிட
வைக்கிறாய்..!
புரியாத புதிரே..
நீ தினமும்
என்னை
வதைக்கிறாய்!
உண்மையில் என்னை
விரும்பியும்..
இல்லை என்றே
மறுக்கிறாய்!
உண்மை வெளி வரும்
ஓர் நாளிலே
உன் காதல் வெளிப்படும்
தன்னாலே..!
காத்திருப்பேன் ..முடியும்..
என்னாலே!
என் மன மாளிகையில்
சுகமாக
வருவாயே!