மருதம்

என்னவாகும்
மருதம் 
இனி ?

நீர்யின்றி
சாயும் 
நிலங்கள் 

புல்யின்றி
புதையும்
மாடுகள்

இறையின்றி
இறக்கும் 
எலிகள் 

திசைமாற்றி 
பறக்கும் 
கிளிகள்

அடிவயிற்றில் 
எஞ்சிய 
அமிலம் 

இனியில்லை 
தேன்கூடுகள்
வாழ்வின் 
மீத 
தேனையும் 
உறிஞ்ச 
வந்துவிட்டது 
மீதேன் 

எழுதியவர் : வா.பாலகுரு (20-Oct-14, 11:27 am)
சேர்த்தது : balaguru
பார்வை : 297

மேலே