பொறந்தவீடு புகுந்தவீடுமகள்மருமகள் 555

நான்...

நாளை விடுமுறை
ஞாயிற்று கிழமை...

சிறிது நேரம் உறங்கலாம்
உதடுகள் சொல்லிகொண்டது...

மனமோ எழவேண்டும்
நேரமாக என்றது...

கைபேசி ஒலித்தது
ஆறு என்று...

கால்களும் மனமும்
விழித்தன வேகமாக...

எப்போதும் போல
சமையல் அறையில்...

வேலைகள் தொடங்கின
மாமியாரின் குரலும் கூடவே...

வேலைகள் ஆரம்பித்தன
கேட்டும் கேட்காமலும்...

தொடங்கின என்
சேவைகளும்...

மகள்,மகன்,மாமா
அத்தை,நாத்தனார் என்று...

அம்மா சுட்டி டிவி போடு
பாக்கணும் ஒன்பது ஆச்சி
என்றாள் மகள்...

சட்டென நினைவுக்கு
வந்தார் கணவர்...

தித்திக்கும் தேநீருடன்
எழுப்பினேன் கணவரை...

விடுமுறைதானே இன்னும்
கொஞ்சம் தூங்கட்டும்...

அத்தையின் குரல்...

அப்போ நான்...?

அம்மா நினைவுக்கு
வந்தாள்...

போம்மா நான் தூங்கனும்
லீவுதானே...

அன்று நான் சொன்னது...

அம்மாவுக்கு விடுமுறையில்
கூட உதவாமல் நான்...

அன்புள்ள அம்மா...

பிறந்தவீட்டில் மகள்...

புகுந்தவீட்டில் மருமகள்
அல்லவா...

உணர்ந்தேன் நான்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (25-Oct-14, 7:46 pm)
பார்வை : 974

மேலே