அலை பேசா நிமிடங்கள்

"நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் எந்த அழைப்பையும் ஏற்கவில்லை"
என கன்னியின் குரல் ஏழாவது முறையாக
கேட்கும் போது
கோபத்தின் உச்சத்தை அடைந்தாள்.
போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தேனோ என அவளது
கைபேசி யோசிக்கும் தருணத்தில்
அதை வேகமாக எறிந்தாள்.
சுவரில் தான் விழபோகிறோம்
என்று தெரியாமல் விடுதலை என நினைத்து
விழுந்ததும் உயிர் நீத்தது
ஏன் இவளுக்கு இவ்வளவு கோபம் தலையணை யோசித்திருக்கும்
அவள் கையால் நசுக்கப்படும் போது.
நானும் யோசித்தேன்

எழுதியவர் : சூரியா (26-Oct-14, 12:18 am)
சேர்த்தது : சூரியா
பார்வை : 72

மேலே