எழுதுதடி காதல் தண்ணீரிலே

எதை வைத்து எழுதுவது !
என்னவள் உன் எழில் சொல்லும்

எதையும் என் கண் காணா வேலையில்
எங்கிருந்து வந்தது இந்த மழை !

நான் காணா உன் கட்டழகில்
நீ எனை நனைக்க !

உன் மேனி பட்ட பூங்காற்று
வந்து எனை அணைக்க !

உன் கட்டழகை என் மனதில்
நான் வடிக்க !

மௌனமாய் என் மனதை
நீ படிக்க !

உன் இதழோர புன்னகையில் நான்
எனை மறக்க !

இதோ எழுதுதடி காதல் தண்ணீரிலே
நம் பெயரை சேர்த்து !

எழுதியவர் : முகில் (26-Oct-14, 1:25 am)
பார்வை : 814

மேலே