தொடர்கதை வேரும் விழுதுகளும் பகுதி - 5

"இல்லத்தா... அப்படில்லாம் இல்ல..." பேச முடியாமல் வார்த்தைகளை விழுங்கினார்.

"அவருக்கிட்ட இருக்கான்னு தெரியலை மாமா... கேட்டு அனுப்பச் சொல்றேன்... இப்ப எங்கிட்ட கொஞ்சம் பணம் இருக்கு... இன்னைக்கு அனுப்பி வைக்கிறேன்... அதை வச்சி உரம் வாங்கிப் போடுங்க..."

"நீ எதுக்குத்தா... அவனுக்கிட்ட வாங்கிக்கிறேனே..."

"நா உங்க மருமகதானே...? அப்புறம் எதுக்கு யோசிக்கிறீங்க..."

"இல்லத்தா... உனக்குன்னு செலவு இருக்கும்... இருக்க காச அனுப்பிட்டு..."

"ஒரு கஷ்டமும் இல்லை மாமா... அத்தைய மழை நேரத்துல வெளிய தெருவ போகும் போது பாத்துப் போகச் சொல்லுங்க... உடம்பைப் பார்த்துக்கங்க..."

"சரித்தா... அப்ப வச்சிடுறேன்... தம்பி வந்தா போன் பண்ணச் சொல்லு..."

எழுதியவர் : -'பரிவை' சே.குமார் (27-Oct-14, 11:08 pm)
சேர்த்தது : சே.குமார்
பார்வை : 122

மேலே