சமாதானம் சென்ரியு

*
தீராத வாக்குவாதம்
மகனுக்கும் தந்தைக்கும்
சமாதானம் செய்வாள் அம்மா.
*
ஊரிலிருந்து அக்காள் வந்தாள்
வீட்டில் அனைவருக்கும்
வயிற்றைக் கலக்கும்.
*
என்னதான் பேசிப்பார்களோ?
தாயும் மகளும்
யாருமில்லாத சமயம்.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (30-Oct-14, 12:10 pm)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 106

மேலே