வனம்7

கானகம் குழந்தைகளின் அனுபவத்தை மெருகேற்றி பசுமரத்தாணிகளை பதித்து சென்றது. குழந்தைக்கான பெருபான்மையான தருணங்களை , கல்வி கவர்ந்து கொள்வதால் , அவர்கள் புத்தகத்தில் கற்பனை செய்ததை நிகழ்கால உலகுடன் ஒப்பிட்டு பார்ப்பதில் பூரித்து மகிழ்ந்தனர்.

சுற்றுலா துவங்கிய சென்னையிலிருந்து கோவை வரையிலான தொடர் வண்டிப்பயணத்தின் பாதியை வண்ணம் தீட்டுவதில் செலவிட்டு மகிழ்ந்தனர். வண்ணங்களோடு தத்தம் பள்ளிகளின் அனுபவ எண்ணங்களையும் சேர்த்தே குழைத்து, பெரிய மனுசிகள் சுவாரசியமாய் பேசிவர கண்டும் காணாததுபோல் அமைதியாய் ரசித்து வந்தோம்.


கோவை வந்ததும் எங்களோடு பகிர்ந்து கொண்டனர் பாரத்தை புன்னகை பூத்தவாறே..

பயணத்தின் ஒவ்வொரு தருணத்தையும் அழகாக்கிக்கொண்டே சென்றனர் குழந்தைகள்.

எழுதியவர் : ஆரோக்யா (2-Nov-14, 3:03 am)
சேர்த்தது : ஆரோக்ய.பிரிட்டோ
பார்வை : 651

மேலே