முழுமையை அனுபவிக்க முடியவில்லை
நெடு நாட்களுக்கு பிறகு
எழுதுகிறேன் .....உன் நினைவுகளில் சிக்கி
கொஞ்சம் இருள் சூழ்ந்த
மனம் மயக்கும் மாலை
அங்கங்கு சிதறும் மலை துளிகள்
ஜன்னலின் கம்பிகளில் உற்று பார்த்த பூக்கள்
இதமான குளிர்
இதழில் புன்னகை
செவிகளில் எனக்கு விருப்பமான பாடல்
அனைத்தும் அழகாக இருக்கிறது
இந்த மாலையில் மெய் சிலிர்க்கும் காற்று
அனைத்தையும் ரசிக்கிறேன் அன்பே
ஆனாலும் ஒரு வருத்தம்
என் அருகில் நீ இல்லை என்று
முழுமையை அனுபவிக்க முடியவில்லை
உன் ஸ்பரிசங்கள் இல்லாததினால் ..............