நான் பாவம் செய்த பெண்

உயிரானவனே ....
உன்னால் நான் கவரப்பட ..
அருகதை அற்றவள் எனின் ...
உன் உள்ளத்தில் நான் ..
இல்லையென்றே அர்த்தம் ...!!!

உன் உள்ளத்தில் நான் ...
இல்லையென்றால் ....
நான் பாவம் செய்த பெண் ...
உண்மை காதல் இருவரும்
ஒருவரை ஒருவர் நினைப்பது ...
இல்லையேல்.....
நான் பாவியானேன் ...!!!

திருக்குறள் : 1194
+
தனிப்படர்மிகுதி
+
வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 114

எழுதியவர் : கே இனியவன் (6-Nov-14, 7:00 am)
பார்வை : 134

மேலே