++திடுக்கிடும் திருப்பங்கள்++பாகம் 5++

பக்கென்று பயம் இவன் நெஞ்சை அடைத்தது..
இவன் பார்க்க பார்க்க..
அவர்கள் பக்கத்தில் வந்து கொண்டிருந்தார்கள்...
அவர்கள் நடந்து வருகிறார்களா இல்லை பறந்து வருகிறார்களா என்று கூட தெரியவில்லை...
ஆனால் நடப்பது போல சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தது...
தன்னைப் பார்த்துத்தான் வருகிறார்களோ...
எப்படி தப்பிப்பது.....
என இவன் யோசிக்கும் முன்னே..
அவர்கள் அருகிலேயே வந்து விட்டார்கள்..
இவனுக்கு மூச்சை அடைப்பது போன்று இருந்தது... மயக்கம் வருவது போல இருந்தது...
பயத்துடனே பார்த்துக் கொண்டிருந்தான்..
ஆனால்...
ஆனால்...
அவர்களோ இவனை கண்டு கொண்டது போலவே காட்டிக் கொள்ளவில்லை...
நான்கு கண்களிமே ஒரு வித தீர்க்கத்துடன் எதையோ சாதிக்க செல்வது போல முன்னோக்கி பார்த்துக் கொண்டே சென்று கொண்டிருந்தார்கள்....
இவனுக்கு நினைவுகள் தப்பி உறக்கம் வருவது போல இருந்தது...
அப்படியே தூங்கிப்போனான்...
(தொடரும்)