எதுவுமற்று

தொலைந்து போனேன் - நான்
தொலைவில் போனேன்
என்னைவிட்டு!
எண்ணங்கள் எழவில்லை
என் சிந்தையிலிருந்து!
எழுத்துக்கள் சீறவில்லை
என் பேனாவழியே !
செயல்பாடு நின்று விட்டதோ!
என் நினைவுகளில்!
கண்ணீரைச் சுரக்க
கண்கள் மறுத்ததோ!
காரணம் என்னவோ?
கண்டுவிட்ட வேகத்தில்
ஆயுதம் கொண்டு
அறுக்கப்பட்ட ஆசைகளை
உளறிவிட்டு அதனால்
உடைபட்ட மௌனங்கள்..
உள்ளுக்குள்ளே உதிர்த்தன,
பொருளற்ற புன்னகையை!!!!!

எழுதியவர் : aadhirai (7-Nov-14, 8:55 pm)
சேர்த்தது : Aathirai
Tanglish : edhuvumatru
பார்வை : 74

மேலே