துள்ளி மறைந்த புள்ளிமான்
வெள்ளரி விதையின் பற்கள், வெளித்தெரி கின்ற வாறு
உள்ளமே மலர்ந்த உன்,தன் உவகையைக் காட்டி நிற்பாய்!
புள்ளிமான் முன்னே வந்த, புலியென அப்பா வந்தார்!
துள்ளியே மறைந்தாய், மேகத் திரையெனச் சன்னல் மூடி!
என்னுள்,உன் நினைப்போ , காலை இளம்பனி போல நிற்கும்!