யாதுமாகி

நீ
சிதறிய உனதத்தனை
சிதறல்களையும்
சேமித்து வைத்திருக்கும்
கொள்கலன் நானே !

உனது கோபத்தினத்தினை
பாரன்கீட் வெப்பத்தினை
சேகரித்துக் கொள்ளும்
கொதிகலனும் நானே !

உனது முக்காலங்களையும்
என்னகத்தே
பதிவு செய்து வைத்திருக்கும்
உனதுணர்ச்சிகளின்
உயிர்ப் பதிவு நானே !

நீ சாய்ந்து கொண்டு
உனதத்தனைகளையும்
என்னில் சாய வைக்கிற
உனது
சாய்வு நாற்காலி நானே !

உனது நன்மைகளின்
சாமர வீச்சையும்
உனது தீமைகளின்
வேல் வீச்சினையும்
தாங்கிக் கொண்டு
உனதத்தனை
அடுக்குகளிலும்
சரளமாய் சஞ்சரிக்கத் தெரிந்த
லௌகீகப் பூச்சற்ற
பௌதீகப் பேருண்மை நானே !

வியத்தலின் லயித்தலில்
மையம் கொள்ளும்
உனதிதயத்தின்
ஒரு கோடித் துகள்களிலும்
சஞ்சரித்துச் சங்கமிக்கிற
கடவுள் துகள் நானே !

உனது நினைவுகளின்
தேனீக்கள்
கூடுகட்டக் காத்திருக்கிற
என்
பாறையிடுக்களை
ஸ்பரிசமின்றி
நீ தீண்ட
பொய்யின்றி
மெய் சிலிர்த்து
நானற்ற
நீயாகிப் போகிறேன்
நான் .

எழுதியவர் : பாலா (13-Nov-14, 7:59 pm)
Tanglish : yathumaagi
பார்வை : 134

மேலே