ஆண்டவன் சந்நிதானம்

அடையாத கதவிருக்கும் ஆலயத்திலே
அஞ்சாத சொல்லிருக்கும் அவனிடத்திலே
நிம்மதியும் நிறைந்திருக்கும் அடைக்கலத்திலே
தேடுகின்ற செல்வமெல்லாம் தேவனிடத்திலே
அள்ளித் தர காத்திருப்பான் நம்மிடத்திலே
பொறுத்திருந்து பார்த்திருப்பான்
தேவை எல்லாம் தெரிந்திருப்பான்
கேட்பதெல்லாம் கொடுத்திடுவான் தன் கணக்கிலே
அள்ள அள்ள குறையாத அவனிடத்திலே
அருள் வேண்டி இருள் போக்கி ஒளி பெற்று
இன்பமே இறைவன் எனும் எண்ணத்தில்
திளைத்திடவே வழி உண்டு அவனிடத்திலே
ஆண்டவனின் பாதத்தில் நம் பாரம் கொடுத்திடவே
இனி இல்லை நம்மிடத்தில்குறைகள்
அவன் பாதம் கொடுத்தது எல்லாம் கொடையாகும்
கருணை கொண்ட வள்ளல் அவன்
நம் எல்லோர்க்கும் தந்தை ஆவான்
ஆண்டவனைப் போற்றிடுவோம்
அச்சமெல்லாம் தீர்த்திடுவோம்
ஆலயம் தான் சென்றிவோம்
ஆனந்தமே கொண்டிடுவோம்
ஆண்டவனின் சந்நிதானம் அள்ளித் தரும் பேரின்பமே
நம்பிக்கையில் நாம் இருந்தால் நாடி வரும் நலங்களெல்லாம்
நம்பியவன் நலம் காக்க காத்திருப்பான் நம் தேவன்
தேடிடுவோம் வேண்டிடுவோம் போற்றிடுவோம் ஆண்டவனை

எழுதியவர் : பாத்திமாமலர் (14-Nov-14, 11:05 pm)
பார்வை : 60

சிறந்த கவிதைகள்

மேலே