தனிமை

வாசல் நிறைந்த
காலணிகள்
கூடமெங்கும் சிரிப்பலைகள்
வீதி வரை பேச்சு சத்தம்.


சமையல் செய்து முடியவில்லை என்னால்.
வேலையே ஓயாது ஒரு நேரமும்
குளிக்க கூட நேரமிலாமல்.
ஆனாலும் மனம் முழுக்க
சந்தோசம்.
எப்போது?

என் பிள்ளைகள் எல்லோரும்
என்னோடு இருந்த வரை.

ஆனால்
இன்று ஊஞ்சல் சங்கிலிகள்
தேயுமளவில் ஆட நேரம்
இருக்கிறது.
மயான அமைதிதான் வீட்டில்.


என்ன வேண்டுமானாலும் செய்யலாம்
ஆடலாம்: பாடலாம்:
எங்கும் செல்லலாம்
ஆனால் என் மனம்
தனிமையின் கொடுமையில்
வெந்து சாகிறதே:


எல்லா பிள்ளைகளும்
திருமணமாகி அவரவர்
கூட்டை தேடி சென்ற பின்னால்?

(ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்னர் படைத்த படைப்பை மீண்டும் படைத்துள்ளேன்)

எழுதியவர் : சாந்தி ராஜி (15-Nov-14, 3:34 pm)
Tanglish : thanimai
பார்வை : 322

மேலே