வலிகளின் உச்சம் - உன் பிரிவு

ஏழேழு பிறவிகளும் ..
நீயே என் உயிர் ஆக .
ஆசை கொண்டேனடி ..

கை கோர்த்த நாட்களும் ..
கண் துடைத்த காலங்களும் ,
காணாமல் போக ..

உயிர் இழந்த பிணமாய் ..
உணர்ச்சி அற்ற உருவமாய் ,
அத்தனையும் வெறுமையாய் தோணுதடி ..

என் பிறப்பில் ,
தாயவள் காணாத வலி ..

என் இறப்பில் ,
நான் காணப்போகாத வலி ..

வலிகளின் உச்சம் எல்லாம் ,
உணர்த்துதடி உன் பிரிவு ..

மறுபிறவி ஆசை எல்லாம் ..
மறக்கச் சொல்லுதடி ,
மரத்துப்போன மனது ..!

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (23-Nov-14, 11:23 am)
பார்வை : 709

மேலே