சங்கார தூதனும், உயிர் கொல்லியும்

சங்கார தூதனும்
ஒரு முறை கலங்கி கண்ணீர் வடித்திருப்பான்
தன் பணியை துவங்க !!
தமக்கையின் பிரிவு
என்னவென அறியாது
விளையாட அழைத்த
முத்துமணியை பார்த்து !!

சங்கார தூதனும்
ஒரு கணம் கதறி அழுத பின்
தன் பணியை முடித்திருப்பான் !!
பெற்ற வயிற்றின்
வேதனை ஓலத்தை
பேரோசையாய் கேட்டப்பொழுதில்!!

சங்கார தூதனும்
ஒரு முறை துடித்துடிதிருப்பான்
தன் பணியின் பயனை கண்டு !!
மருத்துவர்களும் செவிலி தாய்களும்
நினைவுகளை மட்டும் ஏந்தி
தலைகுனிந்து அழுது கடந்தபோது !!

சங்கார தூதனும்
ஒரு முறை மௌனித்து துக்கித்திருப்பான்
தன் பணியை ஏன் பெற்றோமென்று !!
இந்த சின்ன மயில்
புன்னகையின் எல்லையில்
புற்று நோய்க்கு
உயிரை காணிக்கை தந்த போது !!

எழுதியவர் : சௌந்தர்யா (24-Nov-14, 1:26 am)
பார்வை : 91

மேலே