தலைவனின் காதல்

இருவிழிக் காந்தங்ளைக் கொண்டு
ஈர்த்தாய் என் இரும்பு நெஞ்சத்தை
ஓடைபோல் ஓடிக்கொண்டிருந்த எண்ணங்களை
ஒடுக்கி குளமாக்கி குழப்பி விட்டாய்
என் மனதை உன் நினைவுகள் ஆக்கிரமித்ததால்
எச்செயலையும் செய்ய முடியவில்லை என்னால்
ஆழமான இவ்வித உணர்வுகளை
அனுபக்கிறாய் நீயும் - ஆனால்
எல்லாம் இருந்தும் இல்லாதது போல்
ஏனோ நடிக்கிறாய் வெளியே - நானோ
இதற்கான காரணம் தெரியாமல்
இன்று வரை துடிக்கிறேன் உள்ளே
ஊமை போல் இல்லாமல் சொல்லடி
உந்தன் காதலை என்னிடம்.

எழுதியவர் : சக்திவேல் (24-Nov-14, 10:21 pm)
சேர்த்தது : சு.சக்திவேல்
பார்வை : 78

மேலே