பிறந்தநாள் வாழ்த்து

பிறந்தநாள்....,
எனக்கு என்றால் அது மகிழ்ச்சி..!
அண்ணைக்கு என்றால் அது பாசம்..!
அய்யனுக்கு என்றால் அது அன்பு..!
மனைவிக்கு என்றால் அது பிரியம்..!
பிள்ளைக்கு என்றால் அது சுகம்..!
தலைவனுக்கு என்றால் அது பெருமை !!

ஐந்துகரனை சிலையில் கண்டோம்..!
பிரபாகரனை சிலோனில் கண்டோம் !!

பணத்திற்காக பாடுபடும் பூமியில்..! தன்
இனத்திற்காக பாடுபட்ட சாமி நீ !!

தமிழை போற்றி பூசினோம்..! நாங்கள்
தமிழரை கயவர்கள் புசிக்கவிட்டோம் !!

பிரபாகரன்-நீ பார்த்தாலும் பார்த்தாய்..!
துப்பாக்கியில் தோட்டாக்களை கோர்த்தாய்..!
புலிகளை ஒன்றாய் சேர்த்தாய்..!
பலநாள் போராடி வேர்த்தாய்..!
இனமனதில் பாலை வார்த்தாய்..!
இன்னுயிரை மக்களுக்காக நீர்த்தாய் !!

நீரின்றி அமையாது இவ்வையகம்..!
தலைவா - நீ இன்றி அமையாது தமிழ்தாயகம் !!

நீ இல்லை
எனும் சொல்லை
தாங்கும் இதயம்
தமிழர்வசம் இல்லை !!

தமிழுக்கு வான் எல்லை..!
தமிழர்க்கு நீ எல்லை..!
இனத்திற்கு ஒரு முல்லை..!
என்றும் எங்கள் வேலுப்பிள்ளை !!!

எழுதியவர் : முரா கணபதி (26-Nov-14, 12:16 pm)
பார்வை : 5905

மேலே