எச்சரிக்கையாயிருங்கள்எசமானர்களே

யாரை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் இழிசொல் கொண்டு அழைக்கலாம்,

இன்னொரு மனிதரின் முன் இதமாக பேசி இதயத்தோடு விஷம் தடவலாம்...

என்று, இறுமாப்போடு திரிகிற உங்களை இனியும் விடமாட்டோம் நாங்கள்.

பொய்களின் மணல் கொண்டு ஆயிரம் காரணங்களை தயார் செய்திருக்கிறீர்கள் நீங்கள்... நீரில் கரையத்தான் போகிறது உங்கள் பொய்களின் சிலைகள்... அப்போது அலையடிக்கும் ஆழ் நீரில் உங்களால் மீண்டும் எழுந்திருக்கவே முடியாமல் போகும்,

எச்சரிக்கையாயிருங்கள்....எசமானர்களே!

நிறத்தால் பேதம் பார்த்த முட்டாள்களை விட கேவலமானது உங்கள் மனம்.
அது படுகுழிகளால் நிரம்பியிருக்கிறது...அதன் மேல் மலர் வனமா...?

நீங்கள் வாழ்வதற்காக எதையும் செய்ய துணிந்திருக்கிறீர்கள்...
பொதுவுடைமை பேசுவது,
பொழுதுகளில் மக்களை திரட்டுவது.,
பொன்னிற வார்த்தைகளால் வாய்ஜாலம் போடுவது..,

உரிமைக்காக போராடிய தலைவர்களின் பெயர்களை கொண்டு உங்கள் சுயதேவைகளை பூர்த்தி செய்துகொள்ள நினைக்கிற முட்டாள்களே....
உங்கள் ஏமாற்று வேலைகள் வெளிவரத்தான் போகிறது அப்போது வெக்கி சாகத்தான் போகிறீர்கள்....

அதுவரை அமைதியாயிருப்போம் நாங்கள்
இருந்தாலும் நாங்கள் விடமாட்டோம் உங்களை...

எழுதியவர் : வரலாறு சுரேஷ் (28-Nov-14, 8:34 pm)
சேர்த்தது : வரலாறு சுரேஷ்
பார்வை : 257

மேலே